Latest News :

3 வது திருமணத்திற்கு முயற்சி செய்யும் ஜெயஸ்ரீ! - ஈஸ்வரின் பகீர் குற்றச்சாட்டு
Friday December-06 2019

சின்னத்திரை தம்பதி நடிகர் ஈஸ்வர் - ஜெயஸ்ரீ ஆகியோரிடம் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தான் தற்போது சின்னத்திரையின் ஹோட் டாப்பிக்காக உள்ளது. அதிலும் ஈஸ்வர் குறித்து ஜெயஸ்ரீ கூறும் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியாகியிருக்கும் ஈஸ்வர் அளித்திருக்கும் புகார் இன்னும் அதிகமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ஈஸ்வர், குடி பழக்கம், சூதாட்டம் என்று இருப்பதோடு, தனது மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜெயஸ்ரீ குற்றம் சாட்டினார்.

 

இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியான ஈஸ்வர், தன்னை தொடர்பு கொண்டு பேசும் பத்திரிகையாளர்களிடம், ஜெயஸ்ரீ குறித்து பல பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்.

 

முதலாவதாக, நடிகை மகாலக்‌ஷ்மியும், தானும் இருக்கும் புகைப்படங்கள் வெளிநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எடுக்கப்பட்டவை, எங்களுக்குள் எந்த தவறான தொடர்பும் இல்லை, ஆனால் ஜெயஸ்ரீ நாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வைத்து, என்னை மிரட்டி பணம் பறிப்பதோடு, எனது பெற்றோரின் சொத்துக்களை அபகரிக்கவும் பார்க்கிறார், என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், நடிகை மகாலக்‌ஷ்மியின் கணவருடன் ஜெயஸ்ரீக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அதை மறைக்கவே அவர் என் மீது தவறு இருப்பதாக காட்டுகிறார். மேலும், எனது பெற்றோரின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்துடன் அவர் இருக்கிறார், என்றவர், ஜெயஸ்ரீ தனது முதல் கணவரிடமும் இதுபோல தான் நடந்துக் கொண்டார்.

 

இரண்டாவது கணவரான என்னிடமும் அவர் தற்போது இப்படி ஏமாற்று வேலைகளில் ஈடுபடுபவர், மூன்றாவது திருமணம் செய்யவும் திட்டம் போடுகிறார். அதற்காகவே இந்த நாடகத்தை அவர் நடத்தி வருகிறார், என்று தெரிவித்துள்ளார்.

Related News

5953

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery