தனுஷ், செல்வராகவன் இடையே திடீர் மோதல்? - காரணம் இது தானாம்
Monday December-09 2019

‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குநராகவும் அறிமுகமாகி, தற்போது இருவரும் தமிழ் சினிமாவில் தங்களுக்கு என்று தனி இடத்தையும், பெரிய ரசிகர் வட்டத்தையும் கொண்டிருக்கிறார்கள்.

 

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில், தம்பி தனுஷ் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் வெற்றிப் படங்கள் தான் என்றாலும், ‘புதுப்பேட்டை’ ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட்டாக உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் மட்டும் இன்றி தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

 

தற்போது தனுஷ் ‘வட சென்னை’, ‘அசுரன்’ என்று மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்து வந்தாலும், இயக்குநர் செல்வராகவனின் படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் செல்வராகவன் ஈடுபட்டுள்ளார். இதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், தனுஷ் புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

Puthupettai

 

காரணம், வட சென்னை, அசுரன் போன்ற படங்களில் நடித்திருக்கும் தனுஷ், அதைப்போன்ற சாயல் கொண்ட புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தில் தற்போது நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். அதற்கு பதில் கார்த்தியை வைத்து செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புகிறாராம். இதனால், செல்வராகவனை புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தின் திரைக்கதை எழுவதை நிறுத்திவிட்டு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரெடி பண்ணும்படி கூறியிருக்கிறாராம்.

 

தனுஷின் இந்த திடீர் மாற்றம் இயக்குநர் செல்வராகவனை ஏமாற்றம் அடைய செய்திருப்பதால், இருவருக்கும் இடையில் திடீரென்று சிறு மோதல் வெடித்திருப்பதாக கூறப்படுகிறது.

 

ஆனால், இந்த மோதல் இரு படைப்பாளிகளுக்கு இடையில் ஏற்படும் வழக்கமான ஒன்று தான், என்றும் கூறப்படுகிறது.

 

Aayirathil Oruvan

 

இந்த மோதல் தகவல் உண்மையோ, வதந்தியோ, செல்வராகவன் - தனுஷ் கூட்டணி படத்திற்காக பெரிதும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும், அவர்களது ரசிகர்கள், அப்படம் ‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகமாக இருந்தாலும் சரி, ‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகமாக இருந்தாலும் சரி, இரண்டையுமே கொண்டாட தயாராகி விட்டார்கள்.

 

தற்போது, ‘பட்டாஸ்’ படத்தை முடித்திருக்கும் தனுஷ், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு ‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

Related News

5964

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

Recent Gallery