Latest News :

ரஜினிக்கு வில்லியாகும் பிரபல நடிகை!
Wednesday December-11 2019

ரஜினியின் ‘தர்பார்’ பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அவரது 168வது படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைக்கின்றனர்.

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் கடந்த இரண்டு தினங்களாக அறிவித்து வருகிறது.

 

அந்த வகையில் முதலில் நடிகர் சூரி படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷும், நடிகை மீனாவும் ‘தலைவர் 168’ படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் இப்படத்தில் நடிப்பதே ஏற்கனவே வெளியான தகவல் தான் என்பதால், இதில் எந்த வித சர்பிரைஸும் இல்லை.

 

அதே சமயம், ‘தலைவர் 168’ படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு சர்பிரைஸாக இருந்தது. காரணம், சிவாஜி உள்ளிட்ட ரஜினியின் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நிராகரித்த பிரகாஷ்ராஜ், இப்படம் மூலமாக முதன் முறையாக ரஜினியுடன் நடிக்கிறார்.

 

மேலும், நடிகை குஷ்புவும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மன்னன், அண்ணாமலை, பாண்டியன் என தொடர்ந்து ரஜினியுடன் மூன்று படங்களில் நடித்த குஷ்பு, சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ரஜினி படத்தில் நடிக்கிறார்.

 

Kushboo

 

’தலைவர் 168’ படத்தில் மீனா ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாகவும், குஷ்பு ரஜினிக்கு வில்லியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

5970

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery