தமிழ் சினிமாவின் முதல் ஜாம்பி மற்றும் முதல் விண்வெளி படத்தை இயக்கியவர் என்ற பெருமை பெற்ற இயக்குநர் சக்தி செளந்தரராஜன் இயக்கியிருக்கும் படம் ‘டெடி’. ஆர்யா, சாயிஷா திருமணத்திற்குப் பிறகு ஜோடியாக நடிக்கும் முதல் படமாக உருவாகியுள்ள இப்படம் ‘மதரசாப்பட்டினம்’ படத்திற்குப் பிறகு ஆர்யா நடிக்கும் பெரிய பட்ஜெட் படமாகும்.
மேலும், இப்படத்தின் அனிமேஷன் கதாபாத்திரம் ஒன்று ஆர்யாவுக்கு இணையான வேடத்தில் படம் முழுவதும் வருவதும், அதன் செயல்பாடுகளும் படத்தின் சிறப்பம்சமாக இருக்கும் என்று இயக்குநர் சக்தி செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு கிராபிக்ஸ் பணியில் ஈடுபட்டுள்ள டெடி குழுவினர், சுமார் நான்கு மாதங்கள் கிராபிக்ஸ் பணிக்காக ஒதுக்கியுள்ளார். எதற்காக இவ்வளவு நாட்கள், என்பது படத்தின் ரிசல்ட் சொல்லும், என்று கூறும் இயக்குநர் சக்தி செளந்தரராஜன், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எப்படி டெடி பியர் பொம்மையை கொஞ்சி மகிழ்வார்களோ, அதுபோல் அடுத்த ஆண்டு வெளியாகும் இந்த டெடி படத்தையும் கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய விதத்தில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாகவும் அமையும், என்றார்.
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அசர்பைஜான் நாட்டில் இப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மிக பழமை வாய்ந்த நாடான அசர்பைஜான் தான் ஒரு காலத்தில் ரஷ்யாவாக இருந்தது. மேலும், இந்நாட்டில் இந்திய சினிமாவை கொண்டாடுகிறார்களாம். அதிலும், பழைய கருப்பு வெள்ளை இந்தி படங்களை அந்நாட்டு மக்கள் அடிக்கடி பார்க்கிறார்களாம். பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் பேத்தி தான் ஆயிஷா என்பதை தெரிந்துக் கொண்டவர்கள், படப்பிடிப்பு தளத்தில் திலீப் குமார்...திலீப் குமார்...என்று சத்தம் போட்டார்களாம்.
சேரி போன்ற பகுதியில் படப்பிடிப்பு நடத்தும் போது பாட்டி ஒருவர், ஆர்யாவை இழுத்து இழுத்து சத்தமாக பேசிக் கொண்டிருந்தாராம். இதைப் பார்த்து கடுப்பான இயக்குநர் சக்தி செளந்தரராஜன், ஏன் இப்படி தொந்தரவு செய்கிறீர்கள், என்று அவரிடம் கேட்க சென்ற அருகே சென்ற போது, ‘மதராசப்பட்டினம்’ படத்தின் டிவிடி-யை காட்டி, ”இது நீதானே”, என்று கேட்டாராம். இப்படி பல வகையில் இந்திய திரைப்படங்களின் ரசிகர்கள் நிறைந்திருக்கும் அசர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு நடத்தியது பெருமையாக இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் கதை மற்றும் பட்ஜெட் பற்றி எதுவும் கேட்காமல் படத்தை தொடங்கிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இன்று வரை படத்தின் செலவு மற்றும் படப்பிடிப்பு குறித்து எதுவும் கேட்காமல், இயக்குநர் கேட்பதை உடனடியாக வழங்கி வருகிறாராம். அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதோடு, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த பெருமைமிகு படங்களில் டெடி-யும் இருக்கும், அந்த வகையில் படத்தை உருவாக்கி வருவதாக, இயக்குநர் சக்தி செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார்.
தொழில்நுட்ப ரீதியாக பலமான படமாக உருவாகி வரும் இப்படத்தில், எப்படி ‘டிக் டிக் டிக்’ படத்தில் குறும்பா பாடல் பேசப்பட்டதோ, அதுபோல் இந்த படத்திலும் டி.இமான் இசை பேசப்படும், என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கிராபிக்ஸ் பணியில் ஈடுபட்டிருக்கும் படக்குழுவினர் படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
திரை இசை பாடல்களைப் போல் தற்போது சுயாதீன பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட தற்போது இதில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்கள்...
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...