தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்க வேண்டிய சிம்பு, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகராக இருந்தும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க முடியாததோடு, கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார். இதனால், சிம்புவின் ரசிகர்களே அவருக்கு எதிராக சோசியல் மீடியாக்களில் பதிவுகளை வெளியிட தொடங்கியிருக்கிறார்கள்.
அதே சமயம், தன்னைப் பற்றி எந்தவிதமான விமர்சனங்கள் வந்தாலும், அதை கண்டுக்கொள்ளாத சிம்பு, தற்போது ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்ட தொடங்கியுள்ளார். சபரி மலைக்கு மாலை போட்ட சிம்பு, இனி திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தனது முன்னாள் காதலியான நடிகை நயன்தாராவை சமீபத்தில் சந்தித்த சிம்பு, பெண்களால் தனது வாழ்க்கை நாசமாகிவிட்டதாக கூறி அழுதாராம். மேலும், என்னை நடிகைகள் பலர் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவரிடம் கூறினாராம். உடனே நயன்தாரா, சிம்புவுக்கு ஆறுதல் கூறினாராம்.
மேலும், நயன்தாராவை சந்தித்து பேசிய பிறகே சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், கோடம்பாக்கத்து டீ கடைகளில் இந்த தகவல் தீயாக பரவுகிறது.
'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...