தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்க வேண்டிய சிம்பு, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகராக இருந்தும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க முடியாததோடு, கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார். இதனால், சிம்புவின் ரசிகர்களே அவருக்கு எதிராக சோசியல் மீடியாக்களில் பதிவுகளை வெளியிட தொடங்கியிருக்கிறார்கள்.
அதே சமயம், தன்னைப் பற்றி எந்தவிதமான விமர்சனங்கள் வந்தாலும், அதை கண்டுக்கொள்ளாத சிம்பு, தற்போது ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்ட தொடங்கியுள்ளார். சபரி மலைக்கு மாலை போட்ட சிம்பு, இனி திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தனது முன்னாள் காதலியான நடிகை நயன்தாராவை சமீபத்தில் சந்தித்த சிம்பு, பெண்களால் தனது வாழ்க்கை நாசமாகிவிட்டதாக கூறி அழுதாராம். மேலும், என்னை நடிகைகள் பலர் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவரிடம் கூறினாராம். உடனே நயன்தாரா, சிம்புவுக்கு ஆறுதல் கூறினாராம்.
மேலும், நயன்தாராவை சந்தித்து பேசிய பிறகே சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், கோடம்பாக்கத்து டீ கடைகளில் இந்த தகவல் தீயாக பரவுகிறது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...