பிரபல கிராமிய பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி, அனிதா தம்பதியின் மூத்த மகள் பல்லவி. இவர் எம்.பி.பி.எஸ் படித்திருக்கிறார். இவர் நேற்று இரவு முதல் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புஷ்பவனம் குப்புசாமி போலீசில் புகார் அளித்திருக்கிறாராம்.
நேற்று இரவு பல்லவிக்கும், அவரது தங்கைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாம். இதில் கோபமடைந்த பல்லவி, வீட்டிலிருந்த காரை எடுத்துக் கொண்டு இரவு 8 மணிக்கு வெளியே சென்றாராம். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லையாம்.
இது தொடர்பாக சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் குப்புசாமி - அனிதா குப்புசாமி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...