அரசியல் குறித்தும், தமிழக அரசியல்வாதிகள் குறித்தும் கருத்து கூறி வரும் கமல்ஹாசன், தன அரசியலுக்கு வந்தால் தனி கட்சி தான் தொடங்குவேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கிடையே, தான் தனி கட்சி தொடங்கியதும் அரசியல் குறித்து ரஜினிகாந்துடன் பேசுவதுடன், அவர் விரும்பினால் அவரை கட்சியின் இணைத்துக் கொண்டு செயல்படவும் தயார் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியின் பேசிய கமல்ஹாசன், ”மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வரத் தயார், அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார். ரஜினி விரும்பினால் அணியில் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அறவழியில் போராடுவதே ஆரம்பம், அகிம்சையின் உச்சகட்டம் போராட்டம். நான் தொழிலுக்காக நடிக்கிறேன், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...