Latest News :

இயக்குநர் பாலா படத்தில் மீண்டும் துருவ்!
Thursday December-19 2019

பாலாவின் ‘சேது’ விக்ரமின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியதோடு, அவரது ‘பிதாமகன்’ படம் மூலம் தான் தேசிய விருதும் பெற்றார். விக்ரமின் வெற்றியிலும், முன்னேற்றத்திலும் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய இடம் இருப்பதைப் போல் அவரது மகன் துருவ் வாழ்க்கையிலும் அது இருக்க வேண்டும், என்பதால் தான் துருவ் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்தை பாலா இயக்க வேண்டும் என்று விக்ரம் விரும்பினார்.

 

அதன்படி, தெலுங்கில் வெற்றிப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்கான ‘வர்மா’-வை பாலா ரீமேக் செய்தார். படம் முடிவடைந்த நிலையில், சில பிரச்சினைகளால் அப்படத்தை தயாரிப்பாளர் வெளியிட மறுத்ததோடு, முதலில் இருந்து வேறு ஒரு இயக்குநரை வைத்து எடுக்க இருப்பதாகவும் அறிவித்தார். இது பாலாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதோடு, இந்த விஷயம் தொடர்பாக விக்ரமும் அவருக்கு சப்போர்ட் செய்யவில்லை.

 

இதற்கிடையே, வேறு ஒரு இயக்குநரின் இயக்கத்தில் துருவ் நடித்த ‘ஆதித்ய வர்மா’ வெளியாக அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாமல் போய்விட்டது.

 

இந்த நிலையில், ‘ஆதித்ய வர்மா’ படத்தை காட்டிலும் பாலா இயக்கிய ‘வர்மா’ சிறப்பாகவே இருந்ததாக அப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும், பாலாவின் சேது படத்தை தான் அர்ஜுன் ரெட்டி என்று எடுத்தார்கள். அதே அர்ஜுன் ரெட்டியை தான் பாலா மேம்படுத்தப்பட்ட சேதுவாக எடுத்தார். சொல்லப்போனால் சேது விக்ரமின் அப்டேட் வெர்சன் தான் வர்மா, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஒளிப்பதிவாளர் சுகுமார், ”ஆதித்ய வர்மா படத்தில் துருவின் நடிப்பை வெகுவாக பாராட்ட பாலா தான் காரணம். அவர் கொடுத்த பயிற்சியும், வாங்கிய வேலையும் தான் துருவை அப்படி நடிக்க வைத்திருக்கிறது. துருவ் சிறந்த நடிகராக வருவார், என்று அப்போதே பாலா கூறினார். மற்ற நடிகர்களிடம் இல்லாத தனி சிறப்பு துருவிடம் இருக்கிறது. அவர் தமிழ் பேசினால் தமிழ் நடிகராக தெரிவார். அதே சமயம், ஆங்கிலம் பேசினால் ஏதோ ஹாலிவுட் நடிகர் போல அவரது முகம் மாறிவிடும். இப்படி ஒரு சிறப்பு மிக்க துருவை ஒரு சிறந்த நடிகராக்க பாலா பெரிதும் உழைத்தார்.

 

Cinematographer Sukumar

 

ரீமேக் படம் என்பதால் பாலாவால் சிறப்பாக செய்யமுடியவில்லை அல்லது சிட்டி சப்ஜெக்ட் என்பதால் அவரால் அதை கையாள முடியவில்லை என்று சிலர் கூறுவதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம். இனி வரும் காலங்களில் இயக்குநர் பாலாவும், நடிகர் துருவும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வர்மா பிரச்சினையால் விக்ரம் மற்றும் பாலாவுக்கு இடையே எந்தவித பிரிவும் ஏற்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

6009

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery