‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். மும்பையை சேர்ந்த இவர் நிஜமாகவே குத்துச்சண்டை வீராங்கனை ஆவார்.
‘இறுதிச் சுற்று’ படத்திற்காக தேசிய விருது பெற்ற ரித்திகா சிங், தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அருண் விஜயுடன் ‘பாக்ஸர்’ மற்றும் ’ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், திருமணம் குறித்து பேசிய ரித்திகா சிங், பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமூக வலைதளத்தில் அவ்வபோது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் ரித்திகா சிங்கிடம் ரசிகர்கள் ஒருவர் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ரித்திகா சிங், குறைந்தபட்சம் 5 பேரையாவது தான் திருமணம் செய்துக் கொள்வேன், என்று கூறினார். அவரது இத்தகைய பதிலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...