‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். மும்பையை சேர்ந்த இவர் நிஜமாகவே குத்துச்சண்டை வீராங்கனை ஆவார்.
‘இறுதிச் சுற்று’ படத்திற்காக தேசிய விருது பெற்ற ரித்திகா சிங், தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அருண் விஜயுடன் ‘பாக்ஸர்’ மற்றும் ’ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், திருமணம் குறித்து பேசிய ரித்திகா சிங், பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமூக வலைதளத்தில் அவ்வபோது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் ரித்திகா சிங்கிடம் ரசிகர்கள் ஒருவர் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ரித்திகா சிங், குறைந்தபட்சம் 5 பேரையாவது தான் திருமணம் செய்துக் கொள்வேன், என்று கூறினார். அவரது இத்தகைய பதிலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...