’சுப்பிரமணியபுரம்’ படம் மூலம் பிரபலமான ஜெய், அதன் பிறகு தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சோலோ ஹீரோவாக அவரால் வெற்றி பெற முடியவில்லை. ‘ராஜா ராணி’, ‘எங்கேயும் எப்போதும்’ என்று தொடர்ந்து மல்டி ஹீரோ சப்ஜக்ட் படங்கள் மூலம் தான் வெற்றியை கொடுக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, நடிகை அஞ்சலியுடன் காதல், இஸ்லாம் மதத்திற்கு மாறியது என்று எப்போதும் சர்ச்சைகளின் நாயகனாகவும் ஜெய் வலம் வருகிறார்.
இதற்கிடையே அஞ்சலியுடனான காதல் மற்றும் கல்யாணத்தை மறுத்திருக்கும் ஜெய், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கிறார்.
கடந்த 7 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருவதாக கூறியிருக்கும் ஜெய், அம்மதம் மீது தனக்கு ஏற்பட்ட அபரிவிதமான நம்பிக்கை தான், இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொள்ள செய்ததாக கூறியிருக்கிறார். மேலும், கடவுளையே வணங்காத பிள்ளை ஏதோ ஒரு கடவுளையாவது வணங்குகிறானே, என்று அவரது பெற்றோரும் அவரது முடிவுக்கு குறுக்கே நிற்கவில்லையாம்.
அதேபோல், இஸ்லாம் மதத்திற்கு மாறினாலும் இதுவரை தனது பெயரை மாற்றிக் கொள்ளாமல் இருக்கும் ஜெய், விரைவில் தனது பெயரை அஜீஸ் ஜெய்னு மாற்ற முடிவு செய்திருக்கிறாராம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...