லஷ்மன் ஸ்ருதி என்ற பெயர் தமிழகத்தின் மூளைமுடுக்கெல்லாம் பிரபலமான பெயராகும். கார்ணம், இந்த பெயர் கொண்ட இசைக்குழு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் மூலம் பாராட்டு பெற்றிருக்கிறது.
இசைக் குழு மட்டும் இன்றி சென்னையில் இசைக் கருவிகள் விற்பனை மையம் ஒன்றையும் லஷ்மன் ஸ்ருதி நிர்வாகம் நடத்தி வருகிறது. மேலும், ‘சென்னையில் திருவையாறு’ என்ற மார்கழி மாத இசை பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக லஷ்மன் ஸ்ருதி நடத்தி வருகின்றது.
லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளர்களான இரட்டையர் சகோதரர்கள் ராமன் - லஷ்மன் இசைத்துறையில் எப்படி பிரபலமோ அதுபோல், சினிமா துறையிலும் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர்களில் ஒருவரான ராமன், நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது இந்த திடீர் மரணம் தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ராமன் தற்கொலை செய்துக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலீசார் அவரது தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...