”ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு” என்று கூறிய ஏசுநாதரின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் நாளில் மக்களுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். அந்த வகையில், அனைத்து நிகழ்வுகளுக்கும் மக்களுக்கு வாழ்த்து கூறும் ‘களவாணி 2’ வில்லன் நடிகர் துரை சுதாகர், ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் துரை சுதாகர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், “சமாதானத்துடன் வாழுங்கள், என்று போதித்த ஏசுநாதரின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் நன்நாளில், மக்கள் அனைவரும் சமாதானத்துடன் சமத்துவம் பழகி சந்தோஷமாக வாழ வேண்டும். பிறருக்கு தங்களால் முடிந்ததை கொடுத்து கொண்டாடும் இந்த திருநாளில், பிறரை சந்தோஷப்படுத்தி நாமும் சந்தோஷம் அடைவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

‘களவாணி 2’ படத்தை தொடர்ந்து ‘டேனி’ படத்தில் அதிரடி காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் துரை சுதாகர், மக்கள் செல்வி வரலட்சுமி சரத்குமாருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.
‘களவாணி 2’ படத்தில் வித்தியாசமான வில்லத்தனத்தை காட்டி பாராட்டு பெற்ற துரை சுதாகர், ‘டேனி’ படத்தில் வித்தியாசமான போலீஸாக மக்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...