தமிழ் சீரியல் உலகில் பிரபலமாக இருப்பவர் ரேகா. சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் ரேகாவின் கணவர் கோபிநாத். 39 வயதாகும் கோபிநாத் அண்ணா நகரில் உள்ள விளம்பர நிறுவனம் ஒன்றில் மேனஜராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இதற்கிடையே, கோபிநாத் பணிபுரியும் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், ரேகாவுக்கும், கோபிநாத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கோபிநாத் கடன் பிரச்சினையிலும் சிக்கி தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது அலுவலக அறையில் நேற்று முன் தினம் கோபிநாத் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கோபிநாத்தின் அலுவலகத்திற்கு மூன்று சாவிகள் இருக்கிறதாம். அதில் ஒன்று கோபிநாத்திடம் இருக்குமாம். நேற்று முன் தினம் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், அலுவலகத்தில் யாரும் இல்லை. அப்போது அலுவலகத்திற்கு வந்த கோபிநாத், தனது அறையில் தூக்கு போட்டுக் கொண்டுள்ளார்.
விடுமுறை முடிந்து நேற்று வழக்கம் போல ஊழியர்கள் அலுவலகம் வந்தபோது, அலுவலகம் பூட்டாமலேயே இருந்திருக்கிறது. பிறகு உள்ளே சென்ற போது கோபிநாத் தூக்கில் தொங்கியதை பார்த்து அலறியடித்து ஓடிவந்திருக்கிறார்க. இது குறித்து ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...