பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அவ்வபோது சில தமிழ்ப் படங்களில் தலை காட்டும் இவர், தற்போது அருண் விஜயின் ‘பாக்சர்’ படத்திலும், விஜய் டிவி காமெடி நடிகர் ராமர் ஹீரோவாக நடிக்கும் ‘போடா முண்டம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இரவு நேர பார்ட்டி ஒன்றில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதையாகிய சஞ்சனா கல்ராணி, கன்னட சினிமா தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இரவு நேர மது விருந்தில் சஞ்சனா கல்ராணி, அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போதையில் கன்னட தயாரிப்பாளர் வந்தனா ஜெயினிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இருவருக்கும் இடையே ரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சஞ்சனா தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் வந்தனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சஞ்சனா கல்ராணி மீது வந்தனா ஜெயின் போலீசில் புகார் அளிக்க, போலீசார் சஞ்சனாவிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், வந்தனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உண்மை தான், ஆனால் அவரை பீர் பாட்டிலைக் கொண்டு தாக்கவில்லை, என்று சஞ்சனா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...