Latest News :

நயன்தாரவை சுற்றி பாதுகாப்பு வளையம்! - போட்டது யார் தெரியுமா?
Saturday January-04 2020

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையோடு வலம் வருகிறார். முன்னணி ஹீரோக்கள் படங்களின் முதல் தேர்வாக இருக்கும் நயன், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். நயனை ஹீரோயினாக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் சம்பளத்தை பேரம் பேசாம் வழங்குவதாக கூறப்படுகிறது.

 

அந்த வகையில், வேல்ஸ் பிலிம்ஸ் நிருவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்காக நயன்தாராவுக்கு, தற்போது அவர் வாங்கும் சம்பளத்தை இரண்டு மடங்காக வழங்கியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்கிடையே, நயன்தாரா நடித்து வந்த ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். இதற்கு காரணம், இரண்டு மடங்கு சம்பளம் வாங்கிய மூக்குத்தி அம்மன் படத்தை விரைவாக முடித்துக் கொடுத்துவிட்டு, அந்த பணத்தில் நெற்றிக்கண் படப்பிடிப்பு நடத்தலாம், என்று நயனும், சிவனும் முடிவு எடுத்திருக்கிறார்களாம்.

 

இந்த நிலையில், ‘நெற்றிக்கண்’ படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவன், நயன்தாராவை சுற்றி பாதுகாப்பு வளையம் ஒன்றை போட்டு வைத்திருந்தாராம். யாராவது நயனை குறுகுறுவென்று பார்த்தார்கள் என்றால், உடனே அவர்கள் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படுவதோடு, படத்தில் இருந்தே தூக்கப்பட்டு விடுவார்களாம்.

 

மேலும், படத்தில் நடிப்பவர்கள் மற்றும் பிற பணியில் இருப்பவர்கள், தங்களது வேலை முடிந்த பிறகு ஒரு நிமிடம் கூட அந்த இடத்தில் இருக்க கூடாதாம். அப்படி இருக்க விரும்பினால், அவர்களின் வேலையும் காலியாம்.

 

Nayanthara and Vignesh Shivan

 

நயனை சுற்றி சிவன் போட்ட இந்த பாதுகாப்பு வளையம் குறித்து நயனுக்கு எதுவும் தெரியாதாம். தெரிந்தால், நயன்தாராவை பார்ப்பவர்களை அப்புறப்படுத்தப்படுவது போல விக்னேஷ் சிவனும், நயன்தாரா வாழ்க்கையில் இருந்து அப்புறப் படுத்தப்படலாம், என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

Related News

6084

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery