90 களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்த நடிகை கெளதமி, 1983 ஆம் ஆண்டு வெளியான ’வசந்தமே வருக’ என்ற படத்தில் சுப்புலக்ஷ்மி என்ற கதாப்பாத்திரத்தில் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு, 1987 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தொடர்ந்து பல தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
1988 ஆம் ஆண்டு வெளியான ‘குரு சிஷ்யன்’ மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான கெளதமி, அப்படத்தை தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
இதற்கிடையே, சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட கெளதமி, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தவர், மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல்களில் நடித்து வந்தார்.
திடீரென்று கேன்சரால் பாதிக்கப்பட்ட கெளதமிக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு கரம் நீட்ட, அவர் கமலுடன் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தார். பிறகு தனது மகளின் எதிர்காலத்தை கருதி கமலை விட்டு பிரிந்தவர், பா.ஜ.க கட்சியில் இணைந்தார்.
இவை அனைத்தும், அனைவரும் அறிந்த ஒன்று தன் என்றாலும், நடிகை கெளதமியின் திருமணம் மற்றும் அவரது கணவர் பற்றி எந்த தகவலும் வெளியானதில்லை.
இந்த நிலையில், நடிகை கெளதமியின் முதல் கணவர் சந்தீப் பாட்டியாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், கெளதமியின் திருமணத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று வாழ்த்தியிருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...