ரஜினிகாந்தின் ‘தர்பார் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் தற்போதே கொண்டாட தொடங்கிவிட்டார்கள். அதே சமயம், படத்தின் சிறப்பு காட்சிக்காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில், ‘தர்பார்’ படத்திற்காக ஜனவரி 9, 10, 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் சிறப்பு காட்சி திறையிடுவதற்கான அனுமதியை பெறுவது பெரும் பிரச்சினையாக இருந்ததோடு, இழுபறியாகவும் இருந்தது. ஆனால், தர்பார் படத்தை பொருத்தவரை சிறப்பு காட்சியில் எந்தவித இழுபறியும் இல்லாமல் உடனடியாக அனுமதி கிடைத்திருக்கிறது.


அதே சமயம், சேலத்தில் ரஜினி ரசிகர்கள் ஹெலிகாப்டர் மூலம் கட்-அவுட்டுக்கு மலர் தூவ அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், அம்மாவட்ட கலெக்டர் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...