ரஜினிகாந்தின் ‘தர்பார் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் தற்போதே கொண்டாட தொடங்கிவிட்டார்கள். அதே சமயம், படத்தின் சிறப்பு காட்சிக்காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில், ‘தர்பார்’ படத்திற்காக ஜனவரி 9, 10, 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் சிறப்பு காட்சி திறையிடுவதற்கான அனுமதியை பெறுவது பெரும் பிரச்சினையாக இருந்ததோடு, இழுபறியாகவும் இருந்தது. ஆனால், தர்பார் படத்தை பொருத்தவரை சிறப்பு காட்சியில் எந்தவித இழுபறியும் இல்லாமல் உடனடியாக அனுமதி கிடைத்திருக்கிறது.


அதே சமயம், சேலத்தில் ரஜினி ரசிகர்கள் ஹெலிகாப்டர் மூலம் கட்-அவுட்டுக்கு மலர் தூவ அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், அம்மாவட்ட கலெக்டர் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...