கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக எடுக்க எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலர் முயற்சித்து தோல்வியை தழுவிய நிலையில், மணிரத்னம் தற்போது படப்பிடிப்பையே தொடங்கிவிட்டார். பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’-னில் ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யாவும் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டுடமையாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதால், இந்த நாவலை திரையில் கொண்டு வரும் முயற்சியில் தற்போதும் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரிஸாக எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாராம்.
செளந்தர்யாவின் மே 6 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், எம்.எக்ஸ் பிளேயர் நிறுவனமும் இணைந்து ‘பொன்னியின் செல்வன்’ வெப் சீரிஸை தயாரிக்க இருக்கிறார்களாம். இதில், வந்தியத்தேவனாக ‘தரமணி’ புகழ் வசந்த்ரவி நடிக்க, குந்தவையாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறாராம்.
இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்க இருக்கிறதாம்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...