தமிழ் திரையுலக ஜாம்பவான்களின் கனவுப்படமான ’பொன்னியின் செல்வன்’ தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயராகும் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயராம், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்தி வரும் மணிரத்னம், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பை சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைத்து நடத்த இருக்கிறார்.
இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரது கெட்டப் புகைப்படங்களோடு, படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகிறது. தனது படப்பிடிப்பு விவரங்களை ரகசியம் காக்கும் மணிரத்னம், தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களால் அதிர்ச்சியடைந்திருக்கிறாராம்.
இதோ அந்த புகைப்படங்கள்,



அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...