Latest News :

ரூ.162 கோடி கடனை திருப்பிக் கொடுக்காத சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்!
Friday January-10 2020

தமிழகத்தின் முன்னணி ஆடை,  தங்க நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜெண்ட் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

 

முதலில், தனது கடைகளுக்கான விளம்பரப் படங்களில் நடித்து ட்ரயல் பார்த்த அண்ணாச்சி, தற்போது ஹீரோவாக களம் இறங்கிவிட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது.

 

இந்த நிலையில், சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரதாரர்கள் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை மற்றும் அதன் புரோமோட்டர்ஸ்கள் கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து ரூ.162 கோடி கடன் பெற்றுக் கொண்டு இன்னும் திருப்பி செலுத்தவில்லை என அந்த வங்கி அறிவித்துள்ளது.

 

இதன் மூலம், சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் லிமிடெட் மற்றும் அதன் பாதுகாவலர்களான யோகரத்தினத்தின் மகன் பல்லாகு துரை, அவரது மனைவி சுஜாதா மற்றும் மகன் ஷிரவன் உள்ளிட்டவர்களுக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ரூ.162.80 கோடியை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் உரிமையாளர் பல்லாகு துரையிடம் கரூர் வைஸ்யா வங்கி அறிவிறுத்தியுள்ளது. 

 

இந்த பல்லாகு துரை தான், தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் லெஜெண்ட் என்று கூறப்பட்டது. ஆனால், அது அவர் இல்லை என்பது தான் உண்மை.

 

இது குறித்து லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், தற்போது வங்கியில் கடன் வாங்கியிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கும், திரைப்படத்தில் நடிக்கும் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் சரவணனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சரவணா ஸ்டோர்ஸ் பெயரில் சென்னையில் இயங்கும் நிறுவனங்கள் அனைத்திற்கும் தனி தனி உரிமையாளர்கள் இருக்கிறார்கள். அதன்படி, லெஜெண்ட் என்ற பெயரில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் தான் சினிமாவில் நடிக்கிறார். அவருக்கும் வங்கி கடனுக்கும் தொடர்பு இல்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆக, மக்களே வங்கியில் கடன் வாங்கியிருப்பதாக கூறப்படும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் வேறு, தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கியிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் சரவணன் வேறு. இவருக்கும் வங்கி கடனுக்கும் தொடர்பு இல்லங்கோ.

 

 

Related News

6104

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery