Latest News :

காதலரால் சிக்கலில் சிக்கிய சீரியல் நடிகை! - அதிகாரிகள் எச்சரிக்கை
Friday January-10 2020

தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் மக்களிடம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சரண்யா சுந்தராஜன். செய்தி வாசிப்பாளராக தனது ஊடக பணியை தொடங்கிய இவர், படி படியாக உயர்ந்து தற்போது செய்தி ஆசிரியராக இருப்பதோடு, சீரியல் நடிகையாகவும் மாறிவிட்டார்.

 

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமான சரண்யா, தற்போது தமிழகத்தை தாட்டி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தமிழகர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பிரபலமான முகமாகிவிட்டார்.

 

இந்த நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்துக் கொள்வதற்காக சமீபத்தில் சிங்கப்பூர் சென்ற சரண்யா, அங்கு அடித்த லூட்டியால் சிங்கப்பூரே கதிகலங்கி போய்விட்டதாம். தனியாக லூட்டி அடித்தால் பரவாயில்லை, காதலருடன் சேர்ந்து அடித்ததால் தான், சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் கடப்பாகிவிட்டார்களாம்.

 

நிகழ்ச்சிக்காக விருந்தாளியாக அழைக்கப்பட்ட சரண்யா, தனது காதலரையும் உடன் அழைத்து சென்றதோடு, அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளையும், வசதிகளையும் தனது காதலருடன் சேர்ந்து கொஞ்சம் ஓவராக பயன்படுத்தியதோடு, தங்களது காதல் விளையாட்டுகள் மூலம் மற்றவர்களை முகம் சுழிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

ஒரு கட்டத்தில் கோபமடைந்த சிங்கப்பூர் அரசு அதிகாரிகள், சரண்யாவை எச்சரித்து அனுப்பிவிட்டார்களாம்.

Related News

6105

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery