திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொள்ளும் இரவு விருந்துகள் நட்சத்திர ஓட்டல்களில் நடந்து வருகிறது. இதில், பல்வேறு தவரான சமாச்சாரங்கள் நடப்பதாக போலீஸுக்கு வந்த தகவலை தொடர்ந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த சோதனையில் விபச்சாரம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற இந்த சோதனையில் இரண்டு நடிகைகள் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை நட்சத்திர ஓட்டலில் போலீசார் சோதனை நடத்திய போது, பாலிவுட் குணச்சித்திர நடிகை அம்ரிதா அங்கிருந்து தப்பியோட முயற்சிக்க அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும், ரிச்சா சிங் என்ற நடிகையையும் போலீசார் விபச்சார வழக்கில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு நடிகைகளில் ஒருவரான அம்ரிதா, இந்தி பக் பாஸ் 13 வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட அர்ஹான் கானின் முன்னாள் காதலி ஆவார்.

அர்ஹான் கான், தன்னிடம் இருந்து ரூ.5 லட்சம் ஏமாற்றிவிட்டதாக புகார் கூறிய நடிகை அம்ரிதா, இது தொடர்பாக போலீசில் புகார் அளித்து அர்ஹானை சிறையில் அடைக்கப்போவதாக கூறிய நிலையில், தற்போது அவரே சிறைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...