Latest News :

பாவனா கற்பழிப்பு வழக்கு - முன் ஜாமீன் கேட்கும் காவ்யா மாதவன்!
Saturday September-16 2017

பிரபல நடிகை பாவனா கடத்தி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள பிரபல மலையாள நடிகர் திலீப், அம்மாநில ஆலுவா துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப் தாக்கல் செய்த பல ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வருவதால் அவர் கடந்த இரண்டு மாதங்களாக சிறையில் இருக்கிறார்.

 

இதற்கிடையே, பாவனா வழக்கில் திலீப்பின் நெருங்கிய உரவினர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இதே வழக்கில் திலீபின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதால் அவரும் கைது செய்யப்படுவார், என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், விசாரணையில் போலீசாரிடம் காவ்யா மாதவன் பெயரை கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து காவ்யா மாதவன் கைதாவது உறுதியாகியுள்ள நிலையில், கைதில் இருந்து தப்பிக்க காவ்யா மாதவன், கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 

இந்த மனு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

611

”சினிமாவில் அதிகரிக்கும் பிளாக் மெயில்” - ’வள்ளுவன்’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி வருத்தம்
Thursday October-30 2025

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...

’தாரணி பட விழாவில் விஜயை விமர்சித்த நடிகர் விஜய் விஷ்வா!
Tuesday October-28 2025

மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...

’கசிவு’ ஆத்ம திருப்திக்காக நடித்த படம் - எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி
Wednesday October-29 2025

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...

Recent Gallery