தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நடிகர்கள் என்றால் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் மட்டுமே. அதிலும் ரஜினிகாந்த் தமிழ் சினிமா மட்டும் இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். இதனால், அவரது படங்கள் இந்தியாவை கடந்து ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு பெறுவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ‘தர்பார்’ படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை வைத்து ரஜினிகாந்த் தான் எப்போதும் நம்பர் 1, என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், விஜய்க்கு தான் முதலிடம், அதன் பிறகு தான் ரஜினி, அஜித் எல்லாம், என்று பிரபல தயாரிப்பாளர் கேயார் அளித்திருக்கும் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கேயார் சமீபத்தில் அளித்த பேட்டியில், ”ரஜினி படத்தை விட விஜய் படத்திற்கு தான் அதிகம் மார்க்கெட் இருக்கிறது. ‘பிகில்’ படம் ஆவேஜ் தான். ஆனால், அதுவே இந்த அளவுக்கு வசூல் செய்கிறது என்றால், ஒருவேளை படம் சூப்பராக இருந்தால் வசூல் எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். விஸ்வாசம், பேட்ட ஒன்றாக வந்தாலும் மக்கள் அதிக விடுமுறை என்பதால் அந்த இரண்டு படங்களையும் பார்த்தார்கள். அஜித் படம் ரஜினி படத்தை விட கொஞ்சம் அதிகமாக வசூல் செய்தது.
எப்போதும் விஜய்க்கு தான் முதல் இடம். அவருக்கு அடுத்ததாக அஜித், ரஜினிக்கு மூன்றாவது இடம் மட்டும் தான்.” என்று தெரிவித்திருக்கிறார்.
கேயாரின் இந்த பேட்டி அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களை கோபமடைய செய்தாலும், விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...