பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேவதையை கண்டேன்’ தொடரில் நடித்து வரும் மகாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வர் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக, நடிகர் ஈஸ்வரின் மனைவி நடிகை ஜெயஸ்ரீ புகார் அளித்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பிரச்சினையால், ’தேவதையை கண்டேன்’ தொடரின் டி.ஆர்.பி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டி.ஆர்.பி-யை உயர்த்த சேனல் நிர்வாகம் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்ததாம்.
இதற்கிடையே, ‘தேவதையை கண்டேன்’ தொடரை விரைவில் முடிக்க முடிவு செய்த சேர்னல் நிர்வாகும் வேறு ஒரு தொடரை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், மகாலக்ஷ்மியின் வாய்ப்பு பறிபோன நிலையில், அவருக்கு நடிகை ராதிகா கை கொடுத்திருக்கிறார். ஆம், ராதிகா தயாரித்து நடிக்க இருக்கும் ‘சித்தி 2’ தொடரில் மகாலக்ஷ்மிக்கு முக்கியமான கதாப்பாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘சித்தி 2’ தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், மக்களிடம் பெரும் வரவேற்பு பெறும் என்று கூறப்படுகிறது.
மகாலக்ஷ்மி ராதிகா மூலமாக தான் தொலைக்காட்சி தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...