ஏபிகே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘உறுதிகொள்’. ‘பசங்க’ பட புகழ் மாஸ்டர் கிஷோர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள இப்படம் ரிவைஸ் கமிட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிவைஸ் கமிட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இது குறித்து கூறிய இயக்குநர் ஆர்.அய்யனார், “அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படமாக இருக்க வேண்டுமென நினைத்தே இந்த திரைப்படத்தை இயக்கினேன். ஆனால், இறுதி காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ளதென தணிக்கை குழுவினர் ஏ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். முகம் சுழுக்கும்படியோ, யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையிலோ இந்த திரைப்படம் இருக்காதென நான் நம்புகிறேன். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.” என்றார்.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...