பிரபல திரைப்பட பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம், இந்த விஷயத்தில் ஒரு தரப்பினர் சின்மயிக்கு ஆதரவாகவும், ஒரு தரப்பினர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்ததோடு, சின்மயியை பின்பற்றி மேலும் சிலரும் வைரமுத்து மீது புகார் அளித்தார்கள்.
சுமார் ஒரு வருடமாக நீடித்த இந்த சர்ச்சை, தற்போது அடங்கிவிட்டாலும், பாடகி சின்மயி மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வைரமுத்துவுக்கு எதிராக காட்டமாக கருத்து வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய வைரமுத்து, “பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்.
வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சின்மயி, “அப்போ 20-30 வருஷம் முன்னாடி ஒழிச்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல” என்று தெரிவித்துள்ளார்.
வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்ததால், அவர் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட, சில வருடங்கள் டப்பிங் பேசாமல் இருந்தார். தற்போது மீண்டும் டப்பிங் பேச தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Appo 20-30 varsham munnadi ozhichirundha naanga thappichuruppomla. https://t.co/juTVzAHfeJ
— Chinmayi Sripaada (@Chinmayi) January 21, 2020
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...