கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘கே.ஜி.எப்’ என்ற கன்ண்ட திரைப்படம் கன்னடம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெற்றி பெற்றது. கன்னட சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான யாஷ் நடிப்பில் வெளியான இப்படம், கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆக்ஷன் படமாகும்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பிரம்மாண்டமான செட் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையால் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கே.ஜி.எப் : சேப்டர் 2’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை காட்டிலும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இப்படத்தில் இந்திரா காந்தியின் வேடமும் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் இந்திரா காந்தியை ஒரே ஒரு ஷாட்டில் முகம் தெரியாதவாறு காட்டப்பட்ட நிலையில், இரண்டாம் பாதியில், இந்திரா காந்திர்க்கும் கோலார் தங்க வயலுக்கும் இருந்த தொடர்பு குறித்து விரிவாக பேசப்பட்டிருப்பதோடு, இந்திரா காந்தியின் சில அரசியல் ரகசியங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்களாம்.
இந்திரா காந்தி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டூன் நடிக்கிறார். அதே சமயம், படத்தில் இந்திரா காந்தியின் வேடத்தை, இந்திரா காந்தி என்று அழைக்கிறார்களா அல்லது வேறு எதாவது பெயர் வைத்திருக்கிறார்களா, என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், 80-களில் நடைபெற்ற அரசியல் மற்றும் மறைக்கப்பட்ட சில அரசியல் ரகசியங்கள் குறித்து பேசப்படுவதால், பல சர்ச்சைகள் எழும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...