சீரியல் நடிகைகள் மற்றும் நடிகர்கள் சர்ச்சைகளில் சிக்குவதும், தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு பிரபல நடிகை தற்கொலை செய்துக் கொண்டிருப்பது திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
’தில் டோ ஹாப்பி ஹய் ஜி’ (Dil Toh Happy Hai Ji) என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் சேஜல் ஷர்மா. இவர் நேற்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
நடனக் கலைஞரான இவர், தற்போது இந்தி சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததோடு, முன்னணி சீரியல் நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், அவர் தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். பிஸியான நடிகையாக இருந்த இவரது தற்கொலைக்கு காரணம், தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பிரச்சினை தான் என்றும், சீரியல் துறையில் இவருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை, என்றும் கூறப்படுகிறது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...