தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடித்த அனைத்துப் படங்களும் நல்லாவே கல்லா கட்டியது. இதனால், யோகி பாபுவை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க பலர் வரிசையில் நிற்கிறார்கள். இருந்தாலும், அந்த வரிசையை தவிர்த்த யோகி, வருடத்திற்கு ஒரு படம் மட்டும் அப்படி நடிப்பேன், மற்றபடி காமெடி நடிகராக அதிகப் படங்களில் நடிப்பேன், என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
யோகி பாபுவின் இந்த முடிவுக்கு காரணம், ஓடி..ஓடி...,கோடி கோரியாக பணம் சம்பாதித்தாலும், நடக்க வேண்டிய வயதில் நடக்க வேண்டியது நடக்காமல் போய்விடுமோ, என்பது தான். ‘
ஆம், நேரம் பார்க்காமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட யோகி பாபுவுக்கு, அவரது பெற்றோர்கள் பல வருடங்களாக பெண் தேடி வர, ஒரு கட்டத்தில் அவர்களே சோர்ந்து விட்டார்களாம். இதனால், படப்பிடிப்பில் கவனம் செலுத்துவதோடு, தனது உடல் எடையை குறைப்பதிலும் கவனம் செலுத்த தொடங்கிய யோகி பாபு, நேரத்திற்கு சாப்பிடுவது, நேரத்திற்கு தூங்குவது என்று உடற்பயிற்சி ஆசிரியரின் யோசனையை பாலோ செய்வதால், உழைப்பதை சற்று குறைத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார்.
அவரது இந்த முடிவுக்கு தற்போது வெற்றியும் கிடைத்துவிட்டது. யோகி பாபுக்கு பெண் கிடைத்துவிட்டது. பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு மணக்கப் போகிறார். அவரது பெற்றோர்கள் பார்த்த இப்பெண் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் தானாம்.
யோகி பாபு - பார்கவி திருமணம் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற இருக்கிறதாம்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...