Latest News :

”செருப்பால் அடிப்பேன்”! - பா.ரஞ்சித்தை மறைமுகமாக எச்சரித்த இயக்குநர்?
Thursday January-30 2020

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக உருவெடுத்திருக்கும் பா.ரஞ்சித்தை, சினிமாவை சேர்ந்த பலர் அவ்வபோது விமர்சித்து வருகிறார்கள். இதில் சிலர் நேரடியாகவும், பலர் மறைமுகமாகவும் விமர்சித்து வருகிறார்கள். அதற்கு காரணம், தலித் சிந்தனைகளை வெளிப்படையாக பேசும் பா.ரஞ்சித், தனது திரைப்படங்களிலும் அதை பயன்படுத்துவது தான்.

 

இந்த நிலையில், நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற ‘புறநகர்’ திரைப்பட விழாவில் ‘திமிரு’ படத்தின் இயக்குநர் தருண் கோபி, இயக்குநர் பா.ரஞ்சித்தை மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்.

 

அதாவது, நிகழ்ச்சியில் பேசிய தருண் கோபி, ”தயவுசெய்து சாதியைச் சொல்லிப் படம் எடுக்காதீர்கள். இந்த ஊடகத்தை தப்பா படம் எடுக்காதீர்கள். அப்படி சாதியைச் சொல்லி எவனாவது இனி வந்தா செருப்பால அடிப்பேன். எங்களுக்கு என்ன சாதின்னு தெரியாம தான் வளர்ந்தோம். ஆனால் இப்போது சாதியை அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். சில பேர் அப்படி ஒரு டீம் அமைத்துத் திரிகிறார்கள். தயவுசெய்து அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

 

Puranagar Audio Launch

 

அவர் செருப்பால் அடிப்பேன், என்று சொல்லிய நபர் பா.ரஞ்சித் தான் என்று பரவலாக பேசப்படுகிறது. காரணம் மேலே சொன்னது தான். அதேபோல், பா.ரஞ்சித் தனது படங்களில் சாதி குறித்து வெளிப்படையாக பேசிய பிறகே, சில இயக்குநர்கள் பேச தொடங்கியிருக்கிறார்கள், என்றும் கூறப்படுகிறது.

 

இதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், சினிமா உள்ளிட்ட பல இடங்களில் தற்போது சாதி குறித்து அதிகமாக பேசப்படுகிறது, என்று கூறி வருத்தப்பட்டார்.

 

அதேபோல், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், சாதி பிவிரிவனை மற்றும் சாதி பிரிவினையை தவிர்ப்பது குறித்து நிகழ்ச்சியில் பேசினார்.

 

கமல் கோவின்ராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ’புறநகர்’. மின்னல் முருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இ.எல்.இந்திரஜித் இசையமைத்திருக்கிறார்.

Related News

6169

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

திரைப்பட தயாரிப்பில் இறங்கிய 'நாய்ஸ் அண்டு கிரைன்ஸ்'!
Saturday July-12 2025

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’!
Saturday July-12 2025

‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery