தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் அஜித், தனது படங்கள் பற்றி எந்த இடத்திலும் பேசுவதில்லை. அதேபோல், எந்த நிகழ்வுகளிலும் கலந்துக் கொள்ளாதவர், ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும், அவர் குறித்து அவ்வபோது சில சர்ச்சையான தகவல்கள் பரவி வருகிறது.
அந்த வகையில் ஷாலினி திருமணம் பற்றிய தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி அஜித்தை திருமணம் செய்துக் கொண்டதால் பிரபல நடிகர் ஒருவர் அப்செட்டாகி, கோபப்பட்டார், என்பதை பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி, ஹீரோயினாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். குறிப்பாக விஜயுடன் அவர் நடித்த ‘காதலுக்கு மரியாதை’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்திற்குப் பிறகு அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர், அதன் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவிட்டு, அஜித்தை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.
இந்த நிலையில், ஷாலினி திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டதை அறிந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், வருத்தப்பட்டாராம்.
“நல்ல நடிகை. அஜித் கல்யாணம் பண்ணிட்டாரே. இனிமே நடிக்கவே மாட்டாங்களே” என்று கூறி அமிதாப் பச்சன் கோபப்பட்டாராம்.
இந்த தகவலை நடிகை சுஹாசினி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...