தமிழ் சினிமாவில் சாதிக் கொடுமை பற்றி பேசும் திரைப்படங்களின் வருகை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ‘புறநகர்’ என்ற படமும் சாதிக் கொடுமை பற்றி பேசும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
வள்ளியம்மாள் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து, ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தை ஸ்டண்ட் இயக்குநரான மின்னல் முருகன் இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோயினாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தேனி முருகன், கதிரவ கண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நடிக்க, அனல் அண்ணாமலை வில்லனாக நடித்திருக்கிறார்.
விஜய் திருமூலம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இ.எல்.இந்திரஜித் இசையமைத்திருக்கிறார். ரா.தேவன், செல்லமுத்து, கானா லாலா ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ஜெய்மோகன் எடிட்டிங் செய்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் மின்னல் முருகன் கூறுகையில், “சாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழ முடியாத நாயகன் புகலிடம் தேடி புறநகரில் தஞ்சமடைகிறார். அந்த இடத்திலும் சமூகம் அவரை வாழவிடமால் செய்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாயகன் எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார் என்பதை கமர்ஷியலாக சொல்லும் படம்தான் ‘புறநகர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னையைச் சுற்றிய புறநகரில் படமாக்கினோம். ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தாலும் சண்டைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அனைவரும் ரசிக்கும்படியான படமாக எடுத்துள்ளேன்’’ இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கானா பாடல்கள் இந்த வருடத்தின் வெற்றிப்பாடல்கள் வரிசையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்றார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...