சீன மக்களை அச்சத்தில் உரைய வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதோடு, சீனாவில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை இரண்டு கட்டமாக விமானம் மூலம் மத்திய அரசு இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டது.
இந்த நிலையில், தமிழ் சினிமா காமெடி நடிகர் போண்டா மணிக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக, யூடியூப் சேனல் ஒன்றில் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். தீயாக பரவும் இந்த செய்தியால், தமிழ் திரையுலகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

இது குறித்து நடிகர் போண்டா மணியை தொடர்புகொண்ட போது, அப்படியா!, என்று ஆச்சரியத்தோடு பேசியவர். தான் நன்றாக தான் இருக்கிறேன். எனக்கு கோரோனாவோ, மொரானோவோ எதுவும் இல்லை, கூறினார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...