சீன மக்களை அச்சத்தில் உரைய வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதோடு, சீனாவில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை இரண்டு கட்டமாக விமானம் மூலம் மத்திய அரசு இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டது.
இந்த நிலையில், தமிழ் சினிமா காமெடி நடிகர் போண்டா மணிக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக, யூடியூப் சேனல் ஒன்றில் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். தீயாக பரவும் இந்த செய்தியால், தமிழ் திரையுலகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

இது குறித்து நடிகர் போண்டா மணியை தொடர்புகொண்ட போது, அப்படியா!, என்று ஆச்சரியத்தோடு பேசியவர். தான் நன்றாக தான் இருக்கிறேன். எனக்கு கோரோனாவோ, மொரானோவோ எதுவும் இல்லை, கூறினார்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...