‘தேவையை கண்டேன்’ என்ற சீரியலில் நடித்து வரும் ஈஸ்வர் மற்றும் மகாலக்ஷ்மி இடையிலான கள்ளத்தொடர்பு சீரியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஈஸ்வரின் மனைவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்று தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்சினையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மற்றொரு சீரியல் நடிகையின் வாழ்க்கையிலும் ஒரு விபரீத பிரச்சினை உருவாகியுள்ளது.
சரத்குமார், மீனா நடிப்பில் வெளியான ‘மாயி’ படத்தில் வடிவேலுவுக்கு பெண் பார்க்க போகும் போது, ”வாம்மா மின்னலு...” என்று ஒரு பெண்ணை அழைப்பார்கள். அவர் தான் தீபா. அப்படம் மூலம் மின்னல் தீபா என்று அழைக்கப்பட்டவர். அப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது திரைப்பட வாய்ப்பு இல்லாததால், சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் தீபா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, தீபா படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது, அவரை ஒருவர் அடித்ததாக தகவல் வெளியானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தீபா போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை. மேலும், இது தொடர்பாக அவர் யாரிடமும், எந்த புகாரும் கொடுக்கவில்லை.
விசாரித்ததில், தீபாவை அடித்தவர் அவர காதலராம். தீபாவுக்கு திருமணமாகிவிட்டாலும் தற்போது கவணருடன் சேர்ந்து வாழவில்லை. கணவரை பிரிந்து வாழும் தீபா, அவரது நண்பருடன் நட்பாக பழகியிருக்கிறார். போக போக, அந்த நபர் தீபாவுட பழகுவதில் மாற்றம் ஏற்பட்டதால், தீபா அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டாராம். இதனால், கோபமடைந்த அந்த நபர், படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தீபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை அடித்துவிட்டு, “இவரை நான் காதலிக்கிறேன், இது இவங்களோட கணவருக்கும் தெரியும்” என்று சத்தமாக சொன்னாராம். பிறகு அங்கிருந்து அவர் கிளம்பிவிட்டாராம்.
இது குறித்து தீபா கூறுகையில், என் கணவருக்கும், எனக்கும் குடும்ப நண்பராக அறிமுகமான அவர், நான் எனது கணவருடன் சேர்ந்து வாழாததை பயன்படுத்தி என்னுடன் நெருக்கமாக பழக விரும்புகிறார். நான், அவரை காதலிக்கவில்லை. குடும்ப நண்பர் என்பதால், அவர் குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை. இதற்கு மேலும், அவர் என்னை தொந்தரவு செய்தால் போலீசில் புகார் அளிக்கலாம், என்று முடிவு செய்திருக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தீபாவை அந்த நபர் அடித்துவிட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது, தீபாவின் கணவர் அங்கு வந்தாராம், அதன் பிறகு தான் அடித்தவர் அங்கிருந்து கிளம்பினாராம்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...