ஹீரோயின் சப்ஜக்ட் மற்றும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்று அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் நயன்தாரா, தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். நயன்தாரா முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடிப்பதால், இப்படத்திற்காக விரதம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அது எப்படிப்பட்ட விரதம் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாசப் படத்தில் நடித்த யாஷிகா ஆனந்தும் முக்கிய வேடம் ஒன்றில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை தொடர்ந்து யாஷிகா ஆனந்துக்கு தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்கும் வாய்ப்புகள் வந்ததால் அவர் அப்செட்டாகிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான அவருக்கு தற்போது சொல்லும்படி பட வாய்ப்புகள் இல்லாததால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

என்னதான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலும், கோலிவுட் யாஷிகா ஆனந்தை கண்டுக்கொள்வதில்லை. அப்படியே கண்டுகொண்டாலும், அவரை காண்டாக்கும் விதத்திலேயே கதாப்பாத்திரங்கள் கொடுக்கிறார்களாம்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...