தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சரி, படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தாலும் சரி, சிம்பு பற்றி எப்போதுமே பரபரப்பான செய்திகள் வந்துக் கொண்டு தான் இருக்கிறது. குழந்தையில் இருந்து நடித்து வரும் சிம்புவை பற்றி அவ்வபோது சர்ச்சைகள் எழுந்துக் கொண்டிருந்தாலும், அவர் எதையும் கண்டுக்கொள்வதில்லை. அதேபோல், சில ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருப்பவர், சில ஆண்டுகள் நல்ல பிள்ளையாக நடிப்பார். பிறகு எப்போதும் போல், எதாவது வம்பில் சிக்கிக் கொள்வார்.
சிம்புவின் சினிமா வாழ்க்கையில் மட்டும் இப்படி இல்லை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும், அவரது காதல் கதைகள் மூலம் எழும் சர்ச்சைகளுக்கு அளவே இல்லை.
அந்த வகையில், தனது முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சிம்பு மீண்டும் பழக தொடங்கியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நயன்தாராவை சந்தித்து, தனது வாழ்க்கை குறித்து பேசிய சிம்பு, அவரிடம் கண்ணீர் விட்டு அழுததாக கூறப்படுகிறது. மேலும், மற்றொரு முன்னாள் காதலியான ஹன்சிகாவுடன் சிம்பு, ராசியாகிவிட்டாராம்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாரா குறித்து பேசிய சிம்புவிடம், “நயன்தாரா உங்களிடம் மீண்டும் காதலை வெளிப்படுத்தினால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த சிம்பு, ”நாங்கள் இப்போது நண்பர்கள் மட்டுமே வேறு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். அதே சமயம், நயன்தாராவுடன் தான் நட்பாக மீண்டும் பழக தொடங்கியிருப்பதை மறைமுகமாக சிம்பு கூறியிருக்கிறார்.
அப்படியானால், மீண்டும் காதலில் விழ சிம்பு ரெடியாகவிட்டார். ஆனால், அது நயனா அல்லது ஹன்சிகாவா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...