அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ மை கடவுளே’. அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இப்படத்தை அக்ஸச் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபுவும், ஹாப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
காதல் கதையை வித்தியாசமான பாணியில் சொல்லியிருக்கும் இப்படம் இன்று (பிப்.14) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களையும், முன்னணி ஹீரோக்கள் படங்களையும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ஒரு படத்தை வெளியிடுகிறது, என்றால் அப்படம் தரமான படமாக இருக்கும், என்று ரசிகர்கள் நம்பும் அளவுக்கு சக்தி வேலன் தொடர்ந்து பல நல்லப் படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று வெளியாகியுள்ள ‘ஓ மை கடவுளே’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தியுள்ளது. அனைத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் அட்வான்ஸ் புக்கிங் எதிர்ப்பார்த்ததை விட பெரிய அளவில் புக்காகியிருக்கிறதாம். மேலும், படம் வெளியான முதல் நாளான இன்றே, பல தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாகியிருக்கிறதாம்.
இது குறித்து தனது ட்விட்டர் சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன், சிறப்பான அட்வான்ஸ் புக்கிங்கை பெற்றிருக்கும் ‘ஓ மை கடவுளே’ படம் பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நிகழ்த்தியுள்ளது. மீண்டும் ஒரு முறை கண்டெண்ட் தான் கிங் என்பதை இப்படம் நிரூபித்திருக்கிறது. இப்படத்தை வெளியிட்டதில் பெருமை அடைகிறோம், என்று தெரிவித்துள்ளார்.
#OhMykadavule Magic Starts in Box Office🔥
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) February 14, 2020
Good advance booking in all Multiplexes.
Always content is the king.
A PROUD @SakthiFilmFctry Release@Dili_AFF @AxessFilm @AshokSelvan @abinaya_selvam @ritika_offl @vanibhojanoffl @DoneChannel1 @leon_james
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...