விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘ஓ மை கடவுளே’ இன்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், அவரது புதுப்படத்தின் அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா என்று இரண்டு ஹீரோயின்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை செவன் ஸ்க்ரீன் சார்பில் லலித் குமார் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டைடில் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த ‘நானும் ரவுடி தான்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பதன் மூலம் இப்படத்தின் மீது இப்போதே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...
இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...