தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி கடைசியாக இயக்கிய ‘ஆக்ஷன்’ படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியதோடு, தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்ட்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது சுந்தர்.சி தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் ‘நான் சிரித்தால்’ படமும் மிகப்பெரிய தோல்வியடையும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
இப்படி, இயக்கம் மற்றும் தயாரிப்பு என இரண்டிலும் தொடர்ந்து தோல்வியடைந்திருக்கும் சுந்தர்.சி, இரண்டிலும் ஒரே நேரத்தில் வெற்றி பெறுவதற்காக, தனது ஹாரர் சீரிஸான ‘அரண்மனை 3’யை உடனே தொடங்க இருக்கிறார். இதில் ஹீரோவாக ஆர்யா நடிக்க ஹீரோயின்களாக ராஷி கண்ணா மற்றும் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘அரண்மனை 3’ யில் மூன்றாவது ஹீரோயினாக தமிழ் பிக் பாஸ் சீசன் 3-யில் போட்டியாளாராக கலந்துக் கொண்ட சாக்ஷி அகர்வால் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப்பட்ட சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த சாக்ஷி அகர்வாலுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அம்மணிக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்காததால், தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். தற்போது அந்த புகைப்படங்களுக்கான பலனாக தான் சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 3’யில் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...