தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி கடைசியாக இயக்கிய ‘ஆக்ஷன்’ படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியதோடு, தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்ட்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது சுந்தர்.சி தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் ‘நான் சிரித்தால்’ படமும் மிகப்பெரிய தோல்வியடையும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
இப்படி, இயக்கம் மற்றும் தயாரிப்பு என இரண்டிலும் தொடர்ந்து தோல்வியடைந்திருக்கும் சுந்தர்.சி, இரண்டிலும் ஒரே நேரத்தில் வெற்றி பெறுவதற்காக, தனது ஹாரர் சீரிஸான ‘அரண்மனை 3’யை உடனே தொடங்க இருக்கிறார். இதில் ஹீரோவாக ஆர்யா நடிக்க ஹீரோயின்களாக ராஷி கண்ணா மற்றும் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘அரண்மனை 3’ யில் மூன்றாவது ஹீரோயினாக தமிழ் பிக் பாஸ் சீசன் 3-யில் போட்டியாளாராக கலந்துக் கொண்ட சாக்ஷி அகர்வால் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப்பட்ட சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த சாக்ஷி அகர்வாலுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அம்மணிக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்காததால், தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். தற்போது அந்த புகைப்படங்களுக்கான பலனாக தான் சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 3’யில் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...