தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி கடைசியாக இயக்கிய ‘ஆக்ஷன்’ படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியதோடு, தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்ட்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது சுந்தர்.சி தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் ‘நான் சிரித்தால்’ படமும் மிகப்பெரிய தோல்வியடையும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
இப்படி, இயக்கம் மற்றும் தயாரிப்பு என இரண்டிலும் தொடர்ந்து தோல்வியடைந்திருக்கும் சுந்தர்.சி, இரண்டிலும் ஒரே நேரத்தில் வெற்றி பெறுவதற்காக, தனது ஹாரர் சீரிஸான ‘அரண்மனை 3’யை உடனே தொடங்க இருக்கிறார். இதில் ஹீரோவாக ஆர்யா நடிக்க ஹீரோயின்களாக ராஷி கண்ணா மற்றும் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘அரண்மனை 3’ யில் மூன்றாவது ஹீரோயினாக தமிழ் பிக் பாஸ் சீசன் 3-யில் போட்டியாளாராக கலந்துக் கொண்ட சாக்ஷி அகர்வால் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப்பட்ட சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த சாக்ஷி அகர்வாலுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அம்மணிக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்காததால், தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். தற்போது அந்த புகைப்படங்களுக்கான பலனாக தான் சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 3’யில் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...