பவர் ஸ்டார் என்றதும் நம் நினைவுக்கு பட்டென்று வருபவர் காமெடி நடிகர் சீனிவாசன் தான். இவர் தன்னை டாக்டர் என்றும் சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால், எந்த டாக்டர் என்று மட்டும் சொல்ல மாட்டார். இவர் ஹீரோவாக நடித்த படம் 300 நாட்கள் ஓடியது என்று இவரே பல மேடைகளில் சொல்வதோடு, தனக்கு 5 கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள், என்று கூச்சப்படாமல் சொல்வார். இவர் மீது பல மோசடி புகார்கள் எழுந்த நிலையில், சில காலம் டெல்லி திஹார் சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டு வந்தவர், தன்னையும் ஒரு காமெடி நடிகர் என்று கூறிக்கொண்டு கோலிவுட்டில் வலம் வருகிறார்.
இவரது பெயருக்கு முன்பு இருக்கும் பவர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் தான். இவரை தான் தெலுங்கு ரசிகர்கள் பவர் ஸ்டார் என்று அழைப்பார்கள். ஆனால், சீனிவாசன் அந்த பட்டப் பெயரை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து, பவர் ஸ்டார் என்றாலே தற்போது சீனிவாசன் தான் அனைவரது நினைவுக்கும் வருகிறார். ஏன், கூகுளில் பவர் ஸ்டார் என்று தேடினாலே, சீனிவாசன் தான் வருவார்.
இந்த நிலையில், தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முன்னாள் மனைவியும், நடிகையுமான ரேணு தேசாய்க்கு 5 கோடி ரூபாயில் வீடி ஒன்று வாங்கிக் கொடுத்திருப்பதாக, தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாக, அதை, பவர் ஸ்டார் சீனிவாசன் வாங்கிக் கொடுத்ததாக, சில தமிழ் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, பவன் கல்யாண் 5 கோடியில் வீடு வாங்கிக் கொடுத்திருப்பதாக வெளியான செய்தியை அறிந்து ரேணு தேசாய், கோபமடைந்திருப்பதோடு, இதுவரை தனது முன்னாள் கணவர் மூலம் தனக்கு எந்தவிதமான ஜீவனாம்சமும் கிடைக்கவில்லை. தற்போது தான் இருக்கும் வீடு, தனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது, என்று விளக்கமும் அளித்திருக்கிறார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...