Latest News :

திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டில் நடிகர் துரை சுதாகர்!
Tuesday February-18 2020

‘களவாணி 2’ மூலம் வில்லனாக அறிமுகமான நடிகர் துரை சுதாகர், பப்ளிக் ஸ்டாராக தஞ்சாவூர் மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர். திரைப்படத்தில் வில்லனாக நடித்தாலும், டெல்டா மாவட்டத்தின் ஹீரோவாக வலம் இவர், சினிமாவில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல், சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதோடு, இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அந்நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

 

சமீபத்தில் நடைபெற்ற தன்ஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் நடிகர் துரை சுதாகர் மற்றும் அவரது ரசிகர் மன்றத்தினரின் பணியை பலர் பாராட்டியதோடு, அது தொடர்பான செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியானது. இதை தொடர்ந்து மரம் வளர்ப்பது குறித்தும், இயற்கையை காப்பது குறித்தும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, காதலர் தினத்தன்று திரைப்படம் பார்க்க வந்த இளைஞர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

 

Actor Public Star Durai Sudhakar

 

இந்த நிலையில், சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரியம் மிக்க திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் துரை சுதாகர், கலந்துக் கொண்டு, மாடுபிடி வீரர்களை ஊக்கப்படுத்தியதோடு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கெளரவித்தார். 

 

Actor Public Star Durai Sudhakar

 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் துரை சுதாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதோடு, தனது நிலா புரமோட்டர்ஸ் நிறுவனம் மூலம், மாடுபிடி வீரர்களுக்கான, ஜெஸ்ஸி உள்ளிட்ட உடைகள் மற்றும் பரிசு பொருட்களையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Durai Sudhakar in Thirukkanoorpatti Jallikkattu

 

‘களவாணி 2’ படத்திற்குப் பிறகு, பிற துறைகள் தொடர்பாகவே உங்கள் பெயர் அடிபடுகிறதே, எப்போது மீண்டும் நடிகராக உங்களைப் பற்றி செய்தி வரப்போகிறது?, என்று அவரிடம் கேட்டதற்கு, முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன், விரைவில் நடிகராக உங்களை சந்திப்பேன், என்று கூறுகிறார்.

Related News

6224

”மக்களும், சினிமாவும் மாற வேண்டும்” - ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பட விழாவில் திருநாவுக்கரசு பேச்சு
Tuesday April-23 2024

தமிழ் திரையுலகில் புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்புகளுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு...

நினைவுச் சின்னங்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ’கல்கி 2898 AD’ படத்தின் அஸ்வத்தாமா கதாபாத்திரம்!
Monday April-22 2024

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான திரைப்படம் ’கல்கி 2898 AD’...

நான்கு கதைகளைக்கொண்டு உருவாகும் ‘நிறம் மாறும் உலகில்’!
Monday April-22 2024

அறிமுக இயக்குநர் பிரிட்டோ.ஜெபி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘நிறம் மாறும் உலகில்’...