‘களவாணி 2’ மூலம் வில்லனாக அறிமுகமான நடிகர் துரை சுதாகர், பப்ளிக் ஸ்டாராக தஞ்சாவூர் மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர். திரைப்படத்தில் வில்லனாக நடித்தாலும், டெல்டா மாவட்டத்தின் ஹீரோவாக வலம் இவர், சினிமாவில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல், சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதோடு, இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அந்நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற தன்ஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் நடிகர் துரை சுதாகர் மற்றும் அவரது ரசிகர் மன்றத்தினரின் பணியை பலர் பாராட்டியதோடு, அது தொடர்பான செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியானது. இதை தொடர்ந்து மரம் வளர்ப்பது குறித்தும், இயற்கையை காப்பது குறித்தும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, காதலர் தினத்தன்று திரைப்படம் பார்க்க வந்த இளைஞர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

இந்த நிலையில், சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரியம் மிக்க திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் துரை சுதாகர், கலந்துக் கொண்டு, மாடுபிடி வீரர்களை ஊக்கப்படுத்தியதோடு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கெளரவித்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் துரை சுதாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதோடு, தனது நிலா புரமோட்டர்ஸ் நிறுவனம் மூலம், மாடுபிடி வீரர்களுக்கான, ஜெஸ்ஸி உள்ளிட்ட உடைகள் மற்றும் பரிசு பொருட்களையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘களவாணி 2’ படத்திற்குப் பிறகு, பிற துறைகள் தொடர்பாகவே உங்கள் பெயர் அடிபடுகிறதே, எப்போது மீண்டும் நடிகராக உங்களைப் பற்றி செய்தி வரப்போகிறது?, என்று அவரிடம் கேட்டதற்கு, முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன், விரைவில் நடிகராக உங்களை சந்திப்பேன், என்று கூறுகிறார்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...