Latest News :

திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டில் நடிகர் துரை சுதாகர்!
Tuesday February-18 2020

‘களவாணி 2’ மூலம் வில்லனாக அறிமுகமான நடிகர் துரை சுதாகர், பப்ளிக் ஸ்டாராக தஞ்சாவூர் மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர். திரைப்படத்தில் வில்லனாக நடித்தாலும், டெல்டா மாவட்டத்தின் ஹீரோவாக வலம் இவர், சினிமாவில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல், சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதோடு, இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அந்நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

 

சமீபத்தில் நடைபெற்ற தன்ஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் நடிகர் துரை சுதாகர் மற்றும் அவரது ரசிகர் மன்றத்தினரின் பணியை பலர் பாராட்டியதோடு, அது தொடர்பான செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியானது. இதை தொடர்ந்து மரம் வளர்ப்பது குறித்தும், இயற்கையை காப்பது குறித்தும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, காதலர் தினத்தன்று திரைப்படம் பார்க்க வந்த இளைஞர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

 

Actor Public Star Durai Sudhakar

 

இந்த நிலையில், சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரியம் மிக்க திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் துரை சுதாகர், கலந்துக் கொண்டு, மாடுபிடி வீரர்களை ஊக்கப்படுத்தியதோடு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கெளரவித்தார். 

 

Actor Public Star Durai Sudhakar

 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் துரை சுதாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதோடு, தனது நிலா புரமோட்டர்ஸ் நிறுவனம் மூலம், மாடுபிடி வீரர்களுக்கான, ஜெஸ்ஸி உள்ளிட்ட உடைகள் மற்றும் பரிசு பொருட்களையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Durai Sudhakar in Thirukkanoorpatti Jallikkattu

 

‘களவாணி 2’ படத்திற்குப் பிறகு, பிற துறைகள் தொடர்பாகவே உங்கள் பெயர் அடிபடுகிறதே, எப்போது மீண்டும் நடிகராக உங்களைப் பற்றி செய்தி வரப்போகிறது?, என்று அவரிடம் கேட்டதற்கு, முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன், விரைவில் நடிகராக உங்களை சந்திப்பேன், என்று கூறுகிறார்.

Related News

6224

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery