பிக் பாஸ் மூலம் பிரபலமான இலங்கை தமிழர் தர்ஷனை, காதலித்து வந்த நடிகை சனம் ஷெட்டி, தர்ஷனுக்கும் தனக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அவர் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக, போலீஸில் புகார் அளித்தார். மேலும், தர்ஷனுக்காக தான் ரூ.15 லட்சம் செலவு செய்திருப்பதாகவும், அவர் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க தான் பல்வேறு உதவிகள் செய்ததாகவும், அவர் கூறினார்.
சனம் ஷெட்டியின் புகாரை மறுத்த தர்ஷன், நிச்சயதார்த்தம் நடைபெற்றது உண்மை தான், ஆனால் சனம் ஷெட்டி தனது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதோடு, தன்னை அடிமையைப் போல நடத்துவதாக, கூறியதோடு, நிச்சயதார்த்தத்திற்கு பிறகு அவர் முன்னாள் காதலருடன் இரவு நேர பார்ட்டிகளில் பங்கேற்றார், என்றும் கூறினார்.
இதன் பிறகு இருவர் பிரச்சினையும் தீர்ந்த நிலையில், சனம் ஷெட்டி பேட்டி ஒன்றில், தானும், தர்ஷனும் இரண்டரை மணி நேரம் கணவன், மனைவியாக அந்தரங்க வாழ்க்கை வாழ்ந்ததாக கூறினார். இதனை கேட்டு கடுப்பான தர்ஷன், தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நேசிப்பவர்கள் பிரிவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அது இருவர் பிரச்சினை மட்டுமே. இருவரின் தனிப்பட்ட பிரச்சினையை பலர் அறியும்படி சொல்வது சரியானதாக இருக்காது. நான் அழிய வேண்டும் என்று சிலர் நினைத்தார்கள், அது நடக்காது, அது நடக்கவும் விட மாட்டேன், முன்பை விட, எனது வாழ்க்கையின் மீது அதிகம் கவனம் வைத்து வாழ தொடங்கியுள்ளேன், என்று தெரிவித்துள்ளார்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...