Latest News :

திருப்பதியில் தமிழ் ரசிகரை எச்சரித்த சமந்தா! - வைரல் வீடியோ இதோ
Saturday February-22 2020

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டு ஆந்திர மாநிலத்தில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் சமந்தாவின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.

 

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் ஹீரோயினாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இதே படத்தில் நயன்தாராவும் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார்.

 

சமந்தா தான் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து செல்வது வழக்கும். அந்த வகையில், அவர் நடிப்பில் வெளியான ‘ஜானு’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து சென்றார்.

 

சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவில் மலை மீது நடக்கும் போது, அவரை பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர், அவருடன் நடந்து சென்றதோடு, அவரை புகைப்படம் எடுத்தவாறு செல்ல, கோபமடைந்த சமந்தா, அவரை “இங்க பாரு நடந்தா ஒழுங்கா நட, இந்த போட்டோ எடுக்குற வேலலாம் வேணாம்” என்று எச்சரித்தார்.

 

சமந்தாவின் இந்த எச்சரிக்கை வீடியோ தெலுங்கு மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த வீடியோ,

 

Related News

6235

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery