சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்கள் காலதாமதமாக முதல் திருமணம் செய்துக் கொண்டாலும், இரண்டாவது திருமணத்தை பொருத்தவரை காலதாமதம் செய்வதில்லை. அந்த வகையில், பிரபல நடிகர் ஒருவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த சில நாட்களிலேயே தனது இரண்டாவது திருமணம் குறித்து அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மலையாள சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் செம்பன் வினோத். 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நாயக்கன்’ என்ற மலையாலப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான செம்பன் வினோத், வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என்று பல வேடங்களில் நடித்து வருகிறார். ’கோலிசோடா 2’ மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான இவர், அதன் பிறகு வேறு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. இதற்கிடையே அஜித்தின் ‘வலிமை’ படத்தில் செம்பன் வினோத் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அது வெறும் வதந்தி என்று படக்குழு கூறியதோடு, செம்பன் வினோத்தும் அதில் உண்மை இல்லை, ஆனால் வதந்தி உண்மையானால் சந்தோஷம், என்று கூறியிருந்தார்.

சுனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட செம்பன் வினோத், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதாவை விவாகரத்து செய்துவிட்டார்.
இந்த நிலையில், மரியம் தாமஸ் என்ற சைக்காலிஜிஸ்ட்டை தனது சொந்த ஊரான கோட்டயத்தில் செம்பன் வினோத், இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
தற்போது ஃபாஹத் பாசில் நடிக்கும் ’ட்ரான்ஸ்’ என்ற படத்தில் நடித்து வரும் செம்பன் வினோத், சிறந்த நடிகருக்கான விருதை அவர் IFFK 2018 ல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...