விஜயின் ‘பிகில்’ வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவரது அடுத்தப் படமான ‘மாஸ்டர்’ மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், ‘கைதி’ என்ற படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், இப்படத்தை இயக்குவதாலும், இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகவும், இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத எதிர்ப்பார்ப்பு இப்படத்தின் மீது ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே ‘மாஸ்டர்’ படத்தின் வியாபாரம் முடிந்துவிட்டது. இதனால் விஜயின் மார்க்கெட்டும் உயர்வடைந்துவிட்டதாம். இதனால், விஜய் தனது 65 வது படத்திற்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜயின் 65 வது படம் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, மாஸ்டர் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், தான் விஜயின் 65 வது படத்தையும் இயக்கப் போவதாகவும், அவர் சொன்ன கதை ஒன்று விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜயின் 65 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார், என்பதை கூற ஏற்றுக் கொள்ளலாம், ஆனால், அந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது, என்பது எந்த நேரத்திலும் நடக்காத ஒன்றாகும். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் நடிகர் சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபுவின் நிறுவனமாகும். இவர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரை வைத்து தான் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். வேறு சில வெளி ஹீரோக்களை இவர் வைத்து படம் தயாரித்தாலும், அவர்கள் அறிமுக நடிகர்கள் அல்லாது, வளரும் நடிகர்களை மட்டுமே வைத்து தயாரிப்பார்.
அதனால், விஜயின் 65 வது படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பது என்பது தவறான தகவலாகும்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...