Latest News :

ராதிகா பற்றி வரலட்சுமி அளித்த அதிர்ச்சி பேட்டி! - கோலிவுட்டில் பரபரப்பு
Monday March-02 2020

80 களில் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்தியா சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் ராதிகா. சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர், தொலைக்காட்சி தொடர்கள் மூலமாகவும் பெரும் புரட்சியை உருவாக்கினார். தற்போது ‘சித்தி 2’ சீரையலை தொடங்கியிருக்கும் ராதிகா, அதன் ஆரம்பத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று அனைவரையும் வியப்படைய செய்தார்.

 

நடிகை ராதிகா இரண்டு திருமணம் செய்துக் கொண்டாலும் இரண்டுமே விவாகரத்தில் முடிந்த நிலையில், மூன்றாவதாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சரத்குமாருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். அவரது முதல் மனைவிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் வரலட்சுமி. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் வில்லி, குணச்சித்திர வேடம், ஹீரோயின் என்று வரலட்சுமி நடித்து வருகிறார்.

 

தமிழில் சுமார் அரை டசன் படங்களில் வரலட்சுமி நடித்திருந்தாலும், அந்த படங்கள் ரிலீஸ் ஆவதில் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

 

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராதிகா குறித்து பேசிய வரலட்சுமி, ”நான் ராதிகா அவர்களை ஆண்ட்டி என்று தான் அழைப்பேன் ஏனென்றால் அவர்கள் எனது தாய் கிடையாது. அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி, எனக்கு தாய் என்றால் அது ஒருவர் மட்டும் தான். ஏன் அனைவருக்கும் ஒரே ஒரு தாய் தான். மேலும் அதனால் அவர் எனக்கு அம்மா கிடையாது, அவர் எனக்கு ஆண்ட்டி தான்.” என்று கூறினார்.

 

வரலட்சுமியின் இந்த பேட்டி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல், சத்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வரலட்சுமிக்கு ஒரு அப்பாவாக செய்ய வேண்டிய உதவிகளை நான் செய்ய தவறிவிட்டேன், என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6261

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery