80 களில் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்தியா சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் ராதிகா. சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர், தொலைக்காட்சி தொடர்கள் மூலமாகவும் பெரும் புரட்சியை உருவாக்கினார். தற்போது ‘சித்தி 2’ சீரையலை தொடங்கியிருக்கும் ராதிகா, அதன் ஆரம்பத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று அனைவரையும் வியப்படைய செய்தார்.
நடிகை ராதிகா இரண்டு திருமணம் செய்துக் கொண்டாலும் இரண்டுமே விவாகரத்தில் முடிந்த நிலையில், மூன்றாவதாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சரத்குமாருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். அவரது முதல் மனைவிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் வரலட்சுமி. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் வில்லி, குணச்சித்திர வேடம், ஹீரோயின் என்று வரலட்சுமி நடித்து வருகிறார்.
தமிழில் சுமார் அரை டசன் படங்களில் வரலட்சுமி நடித்திருந்தாலும், அந்த படங்கள் ரிலீஸ் ஆவதில் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராதிகா குறித்து பேசிய வரலட்சுமி, ”நான் ராதிகா அவர்களை ஆண்ட்டி என்று தான் அழைப்பேன் ஏனென்றால் அவர்கள் எனது தாய் கிடையாது. அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி, எனக்கு தாய் என்றால் அது ஒருவர் மட்டும் தான். ஏன் அனைவருக்கும் ஒரே ஒரு தாய் தான். மேலும் அதனால் அவர் எனக்கு அம்மா கிடையாது, அவர் எனக்கு ஆண்ட்டி தான்.” என்று கூறினார்.
வரலட்சுமியின் இந்த பேட்டி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல், சத்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வரலட்சுமிக்கு ஒரு அப்பாவாக செய்ய வேண்டிய உதவிகளை நான் செய்ய தவறிவிட்டேன், என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...