Latest News :

மாணவர்களின் திறமைகளை ஊக்குவித்த நடிகர் துரை சுதாகர்!
Monday March-02 2020

தஞ்சை மக்களின் நட்சத்திரமாக திகழ்ந்து வந்த துரை சுதாகர், ‘களவாணி 2’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவில் பப்ளிக் ஸ்டாராக வலம் வருகிறார். சினிமாவில் நடிக்க தொடங்கிய பிறகு தான் நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டப் பெயர் கொடுப்பார்கள். ஆனால், இவருக்கோ, இவர் செய்யும் சமூக பணிக்காக, நடிகராவதற்கு முன்பாகவே தஞ்சை மக்கள் பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கி விட்டார்கள்.

 

தற்போது தஞ்சை மண்ணை தாண்டி தமிழகம் முழுவதும் பப்ளிக் ஸ்டார் நடிகர் துரை சுதாகராக அறியப்பட்டிருக்கும் இவர், நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், தனது சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இளைஞர்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா பற்றி மக்களிடம் எடுத்துரைத்ததிலும், அந்நிகழ்வு குறித்து உலக தமிழகர்கள் அறிந்துக் கொள்ளும் வகையிலும், நடிகர் துரை சுதாகர் மற்றும் அவரது ரசிகர் மன்றத்தினர் பல்வேறு பணிகளை செய்தார்கள். அப்பணிகள் குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்தியும் வெளியானது.

 

அதேபோல், மரக்கன்றுகள் நடுவது குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, காதலர் தினத்தன்று திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு வந்த இளைஞர்களுக்கும், காதல் ஜோடிகளுக்கும் மரக்கன்றுகளை துரை சுதாகர் வழங்கினார். மேலும், சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி கெளரவித்தவர், போட்டியில் கலந்துக்கொண்ட இளைஞர்களுக்கு, ஜெர்ஸி, சாட்ஸ் உள்ளிட்ட ஆடைகளையும் வழங்கினார்.

 

Director Sarkunam

 

இந்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள முன்னணி கல்லூரியான கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் ‘திறமைகளின் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில், மாணவர்கள் தங்களிடம் இருக்கும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்கள். இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும், என்றால் தஞ்சை மண்ணை பொருத்தவரை முதலில் நினைவுக்கு வருபவர் துரை சுதாகர், என்பதால் அவரையே கிங்ஸ் கல்லூரி நிர்வாகம் சிறப்பு விருந்தினராக அழைத்தது. அவருடன் இயக்குநர் சற்குணமும் கலந்துக் கொண்டார்.

 

மாணவர்களின் திறமைகளை பார்த்து அவர்களை பாராட்டியதோடு நின்றுவிடாமல், அவர்கள் தங்களது திறமைகளை எப்படி மெருகேற்றுவது, அதை வெளி உலகிற்கு எப்படி தெரியப்படுத்துவது, பற்றி பேசிய நடிகர் துரை சுதாகர், இளைஞர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் தான் எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

மாணவர்கள் முன்பு பேசிய இயக்குநர் சற்குணம், இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் என்பதால், அவர்கள் படிப்பை மட்டும் சார்ந்திருக்காமல், இதுபோன்ற கூடுதல் திறமைகளையும் வளர்த்துக் கொள்வது அவர்களது எதிர்காலத்திற்கு சிறப்பானதாக இருக்கும், என்றார்.

 

Public Star Durai Sudhakar in Kings College

 

கல்லூரி செயலாளர் ராஜேந்திரன், முதல்வர் அற்புதா விஜயா செல்வி, பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ‘திறமைகளின் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

Related News

6262

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery