Latest News :

ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி வைத்த நடமாடும் டீ கடை!
Monday March-02 2020

சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் டீ கடையை (எலக்ட்ரிக் ரெட்ரோஃபிட் ஆட்டோ ரிக்‌ஷா) கில்லி சாய், மாட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டியுடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளது. நகரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, மாசு இல்லாத மின்சார இயக்கத்தை வழங்குவதன் ஒரு பகுதியாக இந்த முயற்சி இருக்கிறது. இந்த தனித்துவமான டீ கடை முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, சமூக பொறுப்புள்ள ஒரு தொழிலை நடத்துவதற்கான நம்பிக்கையையும் அவர்களுக்கு வழங்கும். இதனால் கில்லி சாய் இந்த வணிகத்தை திருப்திகரமாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. 

 

தமிழ்நாட்டில் தேயிலை நுகர்வு என்பது மிகப்பெரியது. டீ கடை இல்லாமல் ஒரு தெருவைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிதானது. இந்த சூழலில் ஒரு டீ கடையை வைத்திருப்பதை விட இது சிறந்தது. ஏனெனில், இது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும், பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட மின்சார ஆட்டோ ஆகும். பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், ஐ.டி பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் போன்ற பகுதிகளில் விற்பனை செய்ய இந்த நடமாடும் டீ கடைகள் உதவுகின்றன என்று நிர்வாக இயக்குனர் முகமது ரஹ்மத்துல்லா கூறினார்.

 

கில்லி சாய் ஒரு வருடத்திற்குள் இதுபோன்ற 50 ரெட்ரோ ஃபிட் ஆட்டோக்களை அறிமுகப்படுத்துவதோடு இந்த அனைத்து விற்பனை நிலையங்களிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் தனது சிறகுகளை விரித்து 2000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் கில்லி சாய் நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Gilli Chai

 

இது தவிர, டிரஸ்ட் புரம், பெசன்ட் நகர் மற்றும் பெரம்பூரில் ஒரே நாளில் மற்ற மூன்று மோட்டார் கில்லி சாய் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இதேபோன்ற விற்பனை நிலையங்கள் விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளன என்றும், தங்கள் கடைகள் அனைத்தும் பாலின சார்பற்றவை, சமமான வாய்ப்பு வேலைவாய்ப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கும் என கில்லி ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வில்லியம் ஜெயசிங் கூறினார். 

 

கில்லி சாயில் தேயிலை பிரியர்களுக்கு 50 க்கும் மேற்பட்ட வகை டீ அளிக்கப்படும்.  இது பாஸ்ட்ரிகள் மற்றும் ஐஸ்கிரீம்களைத் தவிர ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவுகளிலும் கவனம் செலுத்துவதால் குடும்பங்கள்  செல்லக்கூடிய இடமாக அமையும். 

 

இந்த தொடக்கவிழா நிகழ்வில் *நடிகர் நாசர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*, வருமான வரி கூடுதல் ஆணையர் *நந்தகுமார் ஐஆர்எஸ்,* விஜிபி தலைவர் *விஜிபி சந்தோசம்*, ஸ்பெயின் கவுன்சில் ஜெனரல் *டோனி லோபோ*, இயக்குநர் *எஸ்.எம்.வசந்த்*, பர்வீன் டிராவல்ஸ் இயக்குநர் *சாதிக்*  மற்றும் எம் ஆட்டோ தலைவர் *மன்சூர் அலிகான்* உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related News

6265

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery