நடிகை வரலட்சுமி, திரைப்படங்களில் தைரியமான பெண்ணாக நடிப்பது மட்டும் இல்லாமல் வாழ்க்கையிலும் தைரியமானவராகவே இருக்கிறார். எந்த விஷயமாக இருந்தாலும், நேரடியாகவும், தைரியமாகவும் பேசும் வரலட்சுமி, சமீபத்திய பேட்டி ஒன்றில், பட வாய்ப்புக்காக தயாரிப்பாளரும், இயக்குநரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அவர்கள் தன்னிடம் பேசிய போன் கால் ஆதாரம் இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.
வரலட்சுமியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வரலட்சுமியின் பேச்சை வரவேற்றிருக்கும் அவரது சித்தியான நடிகை ராதிகா, "Well said Varu, more strength to you" தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
அதே சமயம், ராதிகா தனது தாய் இல்லை, அவர் தனது தந்தையின் மனைவி மட்டுமே, அதனால் அவரை ஆண்டி என்று தான், தான் அழைப்பேன், என்று சமீபத்தி வரலட்சுமி கூறியிருந்தார். ஆனால், இது தொடர்பாக ராதிகா எந்தவித பதில் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...